தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகராட்சி அதிராம்பட்டினம். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் தினமும் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்து அதை விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் மீனவர் ரவி என்பவர் இன்று மீன் பிடித்த போது அவரது வலையில் அரிய வகை மீனான கூரை கத்தாழை சிக்கியது. 25 கிலோ எடைக் கொண்ட அந்த மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.