அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரு மாதத்தில் காணிக்கையாக 25 கோடி கிடைத்துள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த நிலையில் மொத்த காணிக்கையில் ஆன்லைன் மூலம் கிடைத்த நன்கொடை இன்னும் கணக்கிடப்படவில்லை. ஜனவரி 23ஆம் தேதி முதல் தற்போது வரை 60 லட்சம் பேர் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.