தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை ஆகிய பணிகளுக்கு 621 மற்றும் நிலைய அதிகாரிகள் 129 என மொத்தம் 750 காலி பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து  தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை SI பணிகளுக்கு கடந்த மே 5 ஆம் தேதி  எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.   இந்த பணியிடங்களுக்கு 1,45,804 ஆண்கள், 40,885 பெண்கள் மற்றும் திருநங்கைகள் 33 என மொத்தம் 1,86,722 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த தேர்வை சுமார் 1,86,722 பேர் எழுதினார். இந்த நிலையில், தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது