தமிழகத்தில் திமுக அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏற்கனவே கலைஞர் பெயரில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் பயன்பாட்டிற்கு  போட்டுவரப்பட்டுள்ள நிலையில் மேலும் பொது மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ஆக்கபூர்வமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு மற்றும் தனியார் துறை சார்பில் கலைஞர் பிறந்த நாளை ஒட்டி 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

சென்னையில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முகாமானது சென்னை மாநிலக் கல்லூரியில் வருகிற 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதி இலவசம். முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையத் தெரிவித்துள்ளார். மேலும் 10, 12, டிகிரி, ஐடிஐ முடித்த்வர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.