மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த அர்ஜுன் சிங் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் புகுந்த ஒரு கும்பல் அவர் மீது பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல், அர்ஜுன் சிங்கின் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
BREAKING: Mob of 20-30 assaults Bajrang Dal worker Arjun Singh in his Thane mobile shop over controversial Christmas social media post. Attackers used punches, kicks, slippers, bucket & drum. FIR filed; probe on.
pic.twitter.com/moEHPgRusa— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 27, 2025
இந்தத் தாக்குதலின் போது அந்த கும்பல் அர்ஜுன் சிங்கை கைகளாலும் கால்களாலும் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த செருப்புகள், வாலிகள் மற்றும் டிரம்களைக் கொண்டும் கொடூரமாக அடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாக்குதல் நடத்திய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
