எத்தனால் அடிப்படையிலான வாகனங்களை பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எத்தனை நாளை சரியாக பயன்படுத்தினால் பெட்ரோல் விலை குறையும் எனவும் ஒரு லிட்டர் பெட்ரோல் 25 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்நாட்டு சந்தையில் அதிகபட்ச பெட்ரோல் ஒரு லிட்டர் 120 ரூபாயாக உள்ள நிலையில் 60 சதவீத மின்சாரம் மற்றும் 40% பயோ எத்தனால் கலவையால் எரிபொருள் செலவு வெகுவாக குறைக்க முடியும் என அவர் கூறினார். அதனைப் போலவே எத்தனால் பயன்படுத்துவதால் மாசுபாடும் குறையும் என்றும் இதற்கான திட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்