ஒரிசா பாலு என அறியப்படும் தமிழ் ஆய்வாளரும் எழுத்தாளருமான சிவ பாலசுப்பிரமணி (60) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு என்ற சிவசுப்பிரமணியம் மறைந்த செய்தியால் வேதனை அடைந்தேன்.

ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் வரலாற்று தொடர்புகளை கடல் வழியே தேடி கண்டு வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வந்தவர். அவரை இறந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.