உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ஒரு பெண் தனது காதலனுடன் ஓடிப்போக முயன்றபோது, அவளது அண்ணன் அவளை எதிர்கொண்டு வாக்குவாதம் செய்தார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவாக பரவியது. சாலையில் நடந்த இந்த வாக்குவாதம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. சிலர் இடையில் புகுந்து பேச முயன்றனர், மற்றவர்கள் தங்கள் கைபேசிகளில் இந்தக் காட்சியை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் ஒரு உணவகத்திற்கு வெளியே நடந்தது. வாக்குவாதம் தீவிரமடையவே, உணவக உரிமையாளர் கோபத்துடன் தலையிட்டு, அவர்களை வெளியேறும்படி கூறி அவர்களின் பைகளை திருப்பிக் கொடுத்தார். வீடியோவை சமூக வலைதளமான X-இல் பகிர்ந்தவர் கூறுகையில், அந்தப் பெண் மூன்று ஆண்டுகளாக காதலனுடன் உறவில் இருந்ததாகவும், இதை அறிந்த அண்ணன், அவர்கள் திருமணம் செய்ய வேண்டும் அல்லது உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், காதலன் தன்னை ஒரு செங்கல்லால் தாக்கிக் கொண்டது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த வீடியோ இணையத்தில் பரவி, பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் அண்ணனின் நிலைப்பாட்டை ஆதரித்தனர். ஒருவர், “திருமணம் அல்லது பிரிவு என்று கோருவது அண்ணனின் சரியான கோரிக்கை” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “‘செங்கல் தாக்குதல்’ இப்போது புதிய ட்ரெண்ட்” என்று நகைச்சுவையாக கூறினார். இந்த வீடியோ 3.7 லட்சத்திற்கும் மேல் பார்வைகளைப் பெற்று, வைரல் ஆகி உள்ளது