ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பரமாபூரில் உள்ள எம் கே சி ஜி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக் இறந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.