தமிழகத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில் பாஜகவுக்கு மதிமுகவுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நடைபெறுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டில் திமுக நிர்வாகிகள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்துகிறார்கள். வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதைப் போல அடிக்கடி சோதனை என்ற பெயரில் IT, ED அதிகாரிகள் வந்து செல்கிறார்கள். இது அனைத்தையும் திமுக சட்டப்படி சந்திக்கும் என்று உதயநிதி பேசியுள்ளார்.