சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், சிறுவன் ஒருவனை ஆடு ஒன்று மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தச் சிறுவன் சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென ஆக்ரோஷமடைந்த ஆடு ஒன்று அவனை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்து தனது கொம்புகளால் முட்டித் தள்ளியது.
மேலும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போன சிறுவன் கீழே விழுந்தும், அந்த ஆடு விடாமல் அவனை மீண்டும் மீண்டும் முட்டித் தாக்கியது. அங்கிருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதற வைக்கும் வகையில் உள்ளது. விலங்குகளிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
I’m so angry at this boy, he failed the first rule of survival: You don’t stop running. 😫😫🙆♂️🙆♂️ pic.twitter.com/1S5tF4GXWW
— Village Guluva (@VillageGuluva) January 10, 2026
“>
இதனால் ஆடு போன்ற வீட்டு விலங்குகள் கூட சில நேரங்களில் கணிக்க முடியாத வகையில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளக்கூடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாகும். காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, விலங்குகளின் நடத்தை குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
