சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவ வேண்டும் என்பதற்காக, ஓடும் ரயிலில் இருந்து வெளியே உடலை நீட்டி வீடியோ எடுக்க முயன்ற நபர் ஒருவர், தண்டவாளத்தின் அருகில் இருந்த கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் பலத்த விவாதங்களையும், பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.

“>

வெறும் லைக்குகள் மற்றும் சமூக ஊடகப் புகழுக்காகத் தங்களின் உயிரையே பணையம் வைத்து இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரயில் தண்டவாளங்களின் இருபுறமும் கம்பங்கள், சிக்னல்கள் மற்றும் பல்வேறு இரும்பு கட்டமைப்புகள் இருப்பதால், ஓடும் ரயிலில் இருந்து எக்காரணம் கொண்டும் வெளியே எட்டிப் பார்க்கவோ அல்லது தொங்கவோ வேண்டாம் என்று ரயில்வே அதிகாரிகள் பயணிகளுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

சில நொடிகள் கிடைக்கும் இணையப் புகழுக்காகச் செய்யப்படும் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகள், வாழ்நாள் முழுவதும் தீராத பாதிப்பையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிக முக்கிய பாடமாக அமைந்துள்ளது.

எனவே, சமூக வலைதள மோகத்தை விட தங்களின் சொந்த பாதுகாப்பிற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், ரயில்வே பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த விபத்து நம்மை எச்சரிக்கிறது.