ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட்களை அரசு வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவர்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அரசு செலவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படவில்லை. பயணச்செலவை சிஎஸ்கே நிர்வாகம் செலுத்தி விட்டதாக அரசு விளக்கமளித்துள்ளது.