ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் கூறியுள்ளனர்.

இதில் சேவாக் தேர்வு செய்த வீரர்களில் ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம் பெறவில்லை. இதேபோன்று அம்பதி ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. இந்நிலையில் அம்பதி ராயுடு தேர்வு செய்த இந்திய அணியில் குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, சாகல், பும்ரா, மயங்க் யாதவ், சிவம் துபே, தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், சூரியகுமார் யாதவ், ரியான் பராக், விராட் கோலி, ஜெய் ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இதேபோன்று சேவாக் தேர்வு செய்த அணியில் பும்ரா, முகமது சிராஜ், சந்தீப் சர்மா, குல்தீப் யாதவ், ஜடேஜா, ரிஷப் பண்ட், சிவம் துபே, ரிங்கு சிங், சூரியகுமார் யாதவ், விராட் கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.