டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் நேற்று இரவு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் இதில் சிக்கிய 2 மாணவிகள் மற்றும் 1 மாணவர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த மற்ற மாணவர்கள் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் பயிற்சி மையத்துக்குள் தண்ணீர் புகுந்ததற்கு காரணம் அப்பகுதியில் உள்ள சாக்கடை அடைப்பை அடைக்காததுதான் என்று கூறினர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரை கைது செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருக்கும் மற்ற பயிற்சி மையத்தையும் மூட டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது.