மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் கதாசிரியராகவும் இருப்பவர் அடூர் பாலகிருஷ்ணன். இவர் கேரள மாநில அரசின் ஏழை மக்களுக்காக வீடு கட்டும் திட்டத்திற்காக தன்னுடைய பூர்வீக நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இவருடைய மகள் மும்பையில் கலெக்டராக இருக்கும் நிலையில் அவரிடம் ஆலோசனை நடத்திய பிறகு தன்னுடைய பூர்வீக நிலத்தை அரசுக்கு தானமாக வழங்குவதாக அடூர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதன்படி 13.5 சென்ட்  நிலத்தை அடூர் பாலகிருஷ்ணன் தானமாக ஏழை மக்களுக்காக கொடுத்துள்ளார். இவருடைய இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் ஏழை மக்களின் வீடு கட்டும் திட்டத்திற்காக அடூர் பாலகிருஷ்ணன் தன்னுடைய பூர்வீக நிலத்தை தானமாக வழங்கியதற்காக கேரள மாநில உள்துறை அமைச்சர் அவரின் வீட்டிற்கே சென்று நன்றி தெரிவித்துள்ளார்.