சென்னை புறநகர் ரயிலில் மூதாட்டியை சில பெண்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் மூதாட்டியின் முடியை பிடித்து இழுத்து கையால் சரமாரியாக தாக்குகிறார்.

அந்த மூதாட்டியின் கையில் செருப்பு உள்ளது. அதனை பறித்து கீழே போட்டு இளம்பெண் மூதாட்டியை தாக்கிய நிலையில் அருகே இருக்கும் மற்ற பெண்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அழைத்து செல்கின்றனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் சென்னை புறநகர் ரயிலில் நடந்தது என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.