தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடியும் வரை மாதாந்திர பராமரிப்பு என மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்று மின்வாரியத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மின்தடை ஏற்பட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.