CRPF தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது தொடர்பாக இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் CRPF தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக இளைஞரணி சார்பாக வருக ஏப்ரல் 17ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என இளைஞர் அணி செயலாளர் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் சாவித்திரிபவன் அருகே மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. CRPFதேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.