எஸ்எஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (சிஎச்எஸ்எல்) தேர்வு டயர்-1 முடிவுகள்  தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள 1,762 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் LDC/JSA பதவிகளுக்கு 17,495 பேரும், DEO பதவிகளுக்கு 2,061 பேரும் தகுதி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு நவம்பர் 2 ஆம் தேதி நடத்தப்படும். முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/Portal/Results என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.