ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை ஐந்து புள்ளி 35 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து மே 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் ஒரு மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடைய உள்ளது.