கோவை மாவட்டம் மதுக்கரை நாச்சிபாளையத்தில், இன்று காலை ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்த பெண் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜனின் மனைவி பத்மா (53) என்பதும், அவர் வழுக்குபாறை அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பத்மா சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இடம், அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை எரிக்கும் பகுதி என்பதால், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என போலீசார்தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,