
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், தனது 15 வயது மகளை கடந்த 5 நாட்களாக காணவில்லை என வேதனையுடன் கூச்சலிட்டு காவல் நிலையத்திற்கு வெளியே அழுது கதறும் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சதார் கோட்வாலி காவல் நிலையத்தில் நடந்துள்ளது.
இது குறித்து வெளியான தகவலின்படி, உன்னாவ் மாவட்டம் ஆதர்ஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் திவாரி, தனது மகள் காணாமல் போனதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை சதார் கோட்வாலி காவல் நிலையத்தை அணுகினார். ஆனால் போலீசார் உதவி செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ஐயா, நீங்கள் எங்கள் வீட்டிற்கு வரலாம், இல்லையெனில் எங்கள் மலர் போன்ற மகளை மீண்டும் பார்க்க முடியாது” என அவரது கண்ணீருடன் கூறும் உரையாடல், வீடியோவில் பதிவாகியுள்ளது.
தந்தையின் அழுகையை வலியுறுத்தும் இந்த வீடியோவில், அவர் தரையில் அமர்ந்து காவல் அதிகாரியிடம் தொலைபேசியில் அழுகை கலந்த ஆதங்கத்துடன் பேசும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. “பொய்யான உறுதிமொழிகள் மட்டுமே தருகிறீர்கள்; நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம்” என அவர் கூறுகிறார். இது காவல்துறையின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை சோதிக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக உன்னாவ் மாவட்ட ஏஎஸ்பி அகிலேஷ் சிங் கருத்து தெரிவிக்கையில், “சம்பவத்துக்கு உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் இருப்பிடம் கண்டுபிடிக்க ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் வயது 15–16 இருக்கலாம். விரைவில் கண்டுபிடிக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
उन्नाव – सदर कोतवाली में एक पिता का वीडियो वायरल हो रहा है, जिसमें वह अपनी लापता बेटी को खोजने के लिए रोते हुए पुलिस के सामने अपनी व्यथा व्यक्त कर रहा है।
यह घटना तब की है जब 6 मई से नाबालिग किशोरी स्कूल से घर लौटने के बाद से लापता है, और 4 दिन बाद भी पुलिस उसकी तलाश नहीं कर… pic.twitter.com/mbtvUUJCI8
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) May 11, 2025