கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த  சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த பெண் தன்னுடைய கள்ளக்காதலனோடு யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் அன்று இரவு முழுவதும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதன் பிறகு அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அடுத்த நாள் காலை அந்த ஊரில் உள்ள 280 மேற்பட்ட ஆண்களை அழைத்து மது விருந்தும் கிடா பிரியாணி சாப்பாடும் போட்டு பார்ட்டி கொடுத்திருக்கிறார். பின்னர் மது அருந்திவிட்டு அனைவரிடமும் உற்சாகமாக ஆடி பாடினார் .இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனது மனைவி கள்ளக்காதனுடன் சென்றதை ஊருக்கு விருந்து வைத்து கணவர் கொண்டாடிய சம்பவம் கேரளாவில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.