
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் சிவா என்ற மகன் உள்ளார். குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவா பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லம்மாள்(60) என்ற மூதாட்டியை திட்டினார். இதனை பார்த்ததும் கோபமடைந்த செல்லம்மாளின் பேரன் அபிமன்யு(19) சிவாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த அபிமன்யு கத்தியால் சிவாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சிவாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அபிமன்யுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.