கால ஓட்டம் மனிதர்களை எவ்வளவு மாற்றுகிறது என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

88 வயதான முதியவர் ஒருவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வரும் தனது பேத்தியை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றிருந்தார். அவர் தனது மனதில் பழைய நினைவுகளுடன், அந்தச் சிறுமி எப்படி இருப்பாள் என்று தேடிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு முன்னால் வந்து நின்ற ஒரு இளம் பெண்ணை அவரால் அடையாளம் காண முடியவில்லை.

“>

தன்னருகிலேயே நின்றிருப்பது தனது பேத்திதான் என்று தெரிந்ததும், அவர் அடைந்த ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. “தன்னுடைய குட்டிப் பாப்பா இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து நிற்பாள்” என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அந்தத் தாத்தா தனது பேத்தியைக் கட்டியணைத்துத் தழுவிய காட்சி, அங்கிருந்தவர்களை மட்டுமன்றி இணையவாசிகளையும் கண்கலங்க வைத்துள்ளது.