தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பப்லு என்ற பிரித்திவிராஜ். இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்துள்ளார். வானமே எல்லை, பாண்டிய நாட்டுத் தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே 25 வயதில் அகத் என்ற மகனும் உள்ளார். தற்போது பப்லுவிற்கு 57 வயதாகும் நிலையில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும் அவ்வப்போது புகைப்படங்களின் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் சரமரியாக கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பப்லு, என்னை வயசான ஒரு கிழவனாக்கி அதை குறித்து எல்லா சேனல்களிலும் பேசுவார்கள். இந்த ட்ரோல் எல்லாம் எனக்கு பழக்கம்.

என் மனைவிக்கு அது ரொம்ப புதுசா இருந்தது. ரொம்ப சீக்கிரமா எங்கள் இருவருக்கும் என்ன புரிந்தது என்றால் ஒருத்தர் எங்களை குறித்து ஒரு தவறான கருத்து ரீல் பார்த்து அல்லது எங்களுடைய நடனத்தை பார்த்தோ எழுதினால் அது அவர்களுடைய மனநிலை. சில பாதி கிளாசில் தண்ணீர் இருந்தால் ஏன் பாதி கிளாசில் தண்ணீர் இருக்கிறது என்று கூறுவார்கள் இதெல்லாம் அவர்களுடைய கண்ணோட்டம் என்று உருக்கமாக கூறியுள்ளார்