கர்நாடகாவில் வசிப்பவர் பர்வேஜ் மியா. இவர் திரிபுராவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் பர்வேஸ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் அவருடைய மனைவி பிரிந்து தனியே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்  கணவன் பர்வேஜ் அழைத்ததால் அவருடைய மனைவி அவரோடு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தன்னை கணவன் கடத்தி சென்று நாலு பேருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது . இது குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியதையடுத்து திடீரென்று காவல் நிலையம் வந்த அந்த பெண் புகாரை திரும்ப பெற்றுள்ளார். இதுகுறித்த விசாரணையில் தன கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் புகார் அளித்ததாக அந்த பெண் கூறி சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.