நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னை பாலியல் குற்றவாளி என சொல்லுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் என்ன நீதிபதியா? என் மீது புகார் கொடுத்த நடிகை பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் தான் பெண். அவருக்கு மட்டும்தான் மானம் இருக்கிறதா? அவருக்கு மட்டும் தான் காயம்படுமா?

என் வீட்டில் பெண்கள் இல்லையா? என் தாய் என் சகோதரிகள் எல்லாம் இல்லையா? என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம் படாதா? அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி எனக் கூற முடியும். என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அவதூறு பரப்புகிறார்கள் என ஆக்ரோஷமாக பேசினார்.