மும்பையில் உள்ள கோவண்டி ரயில் நிலையத்தின் (Govandi Railway Station) நடைமேடையில், தன்னை முறைத்துப் பார்த்ததாகவும் (Staring) மற்றும் ஆபாச சைகைகள் (Obscene Gestures) செய்ததாகவும் கூறி, ஒரு பெண் ஒரு இளைஞனை அறைந்த (Slapped) வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் ஹார்பர் லைன் பகுதியில் நடந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by MUMBAI TV (@mumbai_tv)

தன்னை நோக்கி அந்த இளைஞன் அநாகரீகமான சைகைகளைச் செய்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அதை வீடியோ பதிவு செய்யத் தொடங்கிய பின்னரும், அந்த இளைஞன் தன் செயலை நிறுத்தவில்லை என்று அப்பெண் கூறியுள்ளார்.

பொறுமை இழந்த அப்பெண், அந்த இளைஞனிடம் நேரில் சென்று விஷயத்தைக் கத்திக் கேட்டு, பின்னர் அவரை அறைந்துள்ளார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அந்த இளைஞன் மறுத்துப் பேசியபோதிலும், பொது இடத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த அநாகரீகச் செயலைத் துணிச்சலுடன் எதிர்த்த அந்தப் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.