நடிகர் வடிவேலுவிற்கு மாமன்னன் திரைப்படத்திற்கு பின் வாய்ப்புகள் அதிகளவில் வருகிறது. சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் காதல் சுகுமார், அளித்துள்ள பேட்டி ஒன்றில், கலகலப்பு என்ற படத்தில் பொன்னம்பலத்துடன் நடிகர் வடிவேலுவின் உடல் மொழியில் நடித்தேன். அதன் பிறகு ஒரு நாள் முத்துக்காளையும், போண்டா மணியும் வடிவேலு பார்ப்பதற்கு ஆசைப்படுவதாக கூறி அழைத்து சென்றார்கள் நானும் அவரை பார்க்க போகிறேன் என்ற ஆர்வத்தில் சென்று அவரை தனியறையில் சந்தித்தேன்.

என்னைப் போலவே நடிக்கிறாய் என்று பாராட்டினார். அதன் பிறகு முத்துக்காளையும் போண்டாமணியையும் ரூமை விட்டு வெளியேறியதும் நானும் கிளம்ப தயாரானேன். ஆனால் வடிவேலு என்னை இருக்க சொல்லியே என்னை மாதிரிய நடிக்க ஏன் ஆசைபடுற என்று கேட்டார். நான் அப்படி எல்லாம் செய்யவில்லை ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனால் நடித்தேன். இனிமேல் உங்களைப் போல் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். அப்பொழுது பின்னால் இருந்து சிலர் என்னை தாக்க தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்து கெஞ்சி கூத்தாடி அங்கிருந்து தப்பி வந்தேன் என்று வேதனையுடன் கூறி இருக்கிறார்.