பாஜகவிலிருந்து காயத்ரி வெளியே அனுப்பப்பட்டபின் அவருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பிரச்னை நாளுக்குநாள் முற்றிவருகிறது. சமீபத்தில் திருச்சி சூர்யா காயத்ரிக்கு எதிராக டுவீட் செய்திருந்தார். இந்நிலையில், ‘அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு.

இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. விவாதிக்க எதுவும் இல்லை. வார்ரூம் ஜோக்கர்கள், கேசவவிநாயகம் ஜி மற்றும் அமைச்சர் எல்.முருகன் ஜியை தாக்க அண்ணாமலை கொடுத்த அடி ஆளு வேலையை முதலில் செய்யுங்கள் என டுவீட் செய்துள்ளார் காயத்ரி.