திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா காரில் வெளியே சென்றார்.

அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் செட்டிபுதூர் பகுதியில் வைத்து தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை சாப்பிட்டு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த ஆடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி கேட்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. அதில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா, என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. என்னால் இதற்கு மேல் வாழ முடியாது. என்னை கணவரும், மாமனார், மாமியாரும் மிகவும் கொடுமை படுத்துகின்றனர்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்கின்றனர். வேறு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. என அழுது கொண்டே கூறியுள்ளார் மேலும் வீட்டில் தனது நகைகளை எங்கெங்கு உள்ளது எனவும் ரிதன்யா குறிப்பிட்டுள்ளார். முழு ஆடியோ இதோ….