8 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய தந்தையை விற்பதற்காக வீட்டின் முன்பு விற்பனை பலகையை வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. எட்டு வயது சிறுவனுக்கும் அவரின் அப்பாவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் சண்டை முடிந்த பிறகு தன்னுடைய தந்தையை விற்க முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வீட்டின் ஜன்னல் கம்பியில் 8 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய தந்தை விற்பனைக்கு தயார், மேலும் விவரங்களுக்கு பெல்லை அழுத்தவும் என விளம்பர பலகையை எழுதி வைத்துள்ளான். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.