வீட்டில் இரட்டை குழந்தைகள் இருந்தால் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமிருக்காது, அதே சமயம் அவர்கள் செய்யும் சேட்டைகளைச் சமாளிப்பது பெற்றோருக்குப் பெரிய சவால்தான். அப்படி ஒரு வீட்டில் இருக்கும் இரண்டு குட்டி வாண்டுகள், எப்போதும் ஒருவருடைய தலைமுடியை மற்றொருவர் பிடித்து இழுத்துச் சண்டை போடுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். சமாதானம் செய்தும் அவர்கள் கேட்பதாக இல்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்த அந்தப் புத்திசாலித் தாய், இரண்டு குழந்தைகளுக்கும் “கபளீகரம்” செய்து மொட்டை அடித்துவிட்டார். இனி பிடிப்பதற்கு முடியே இருக்காது, சண்டையும் வராது என்று அந்தத் தாய் நினைத்துள்ளார்.
Mom found the perfect solution for her twins who kept pulling each other’s hairpic.twitter.com/Dw4MSBzCZa
— Massimo (@Rainmaker1973) January 22, 2026
ஆனால், மொட்டை அடித்த பிறகும் அந்த வாண்டுகள் செய்த காரியம்தான் சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு குழந்தை, பழைய பழக்க தோஷத்தில் மற்றொரு குழந்தையின் தலைமுடியைப் பிடிக்க ஆசையாகக் கையை நீட்டுகிறது. ஆனால், அங்கே ஒரு முடி கூட கையில் சிக்காமல் வழுக்கிக் கொண்டு போவதைப் பார்த்த அந்தக் குழந்தை, “என்னடா இது.. காணாம போயிருச்சு?” என்பது போலப் புரியாமல் மீண்டும் மீண்டும் தலையைத் தடவிப் பார்க்கிறது. மொட்டைத் தலையில் முடி தேடும் அந்த மழலையின் க்யூட்டான வீடியோ இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. “அம்மா கிட்டயே உங்க ஆட்டமா?” என்று நெட்டிசன்கள் இந்தச் சுட்டிகளைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.
