நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திலும் நான் பதற்றமாக இருப்பேன் என நடிகை பிரியங்கா மோகன் ஓபனாக கூறியுள்ளார். “படத்தில் முக்கியமான, அழுத்தமான காட்சி என்றால், மிகவும் பதற்றமாக இருப்பேன். எனக்கு அழுது நடிக்க மிகவும் பிடிக்கும். நான் அழுகிறதைத் திரையில் பார்க்க பிடிக்கும். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் வரும் எமோஷனலான சீன் எடுக்கும்போது, நன்றாக பண்ண வேண்டுமென்ற பயம் இருந்தது” என தெரிவித்துள்ளார்.