ராம் டைரக்டு செய்த “கற்றது தமிழ்” திரைப்படம் வாயிலாக நாயகியாக அறிமுகமானவர்தான் அஞ்சலி. இதையடுத்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா ஆகிய படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அதோடு ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாள, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் அஞ்சலி இணையத் தொடரான பிட்ட கதா தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியாக நடித்து திடுக்கிட வைத்தார். அதனை தொடர்ந்து ஜான்ஸி, பால் ஆகிய தொடர்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இந்த நிலையில் அஞ்சலி தன் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.

அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் “பெண்களை மதிக்கத் தெரிந்த ஒருவரைதான் நான் திருமணம் செய்துக்கொள்வேன். அவர் திருமணம் முடிந்த பிறகும் தன்னை மரியாதையாக நடத்தும் நபராக இருத்தல் வேண்டும். இதற்கு பின் தான் அன்பு, காதல் எல்லாமும். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும் என கூறி இருக்கிறார்.