மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக வந்தடைந்தார். இதையடுத்து மதுரை விமானம் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அதாவது, உயர்நீதிமன்றத்தில் கனக சபையின் மீது பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படலாம் என்று கூறியது. அது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்கனவே பக்தர்கள் தரிசனம் செய்ய ஒரு ஆணை பிறப்பித்தது.

அப்படி இருக்கையில் இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்வது தான் அங்கிருக்கும் பணியாக உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்க சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்துள்ளனர். சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.