தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எண் மற்றும் எழுத்துக்களை கற்பிக்க சிறப்பு ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்களில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை கௌரவிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 812 ஆசிரியர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இன்று குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கௌரவிப்பு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.