அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப  நிகழ்வுகளில் திமுகவை தொடர்பு படுத்தி பேசியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதை பொருள் பறிமுதல், கைது நிகழ்வுகளில் திமுகவை தொடர்பு படுத்தி பேசியதால் கட்சியின் நற்பெயருக்கு  பாதிப்பு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.