மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த நவம்பர் 2023 கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார்
எழுந்துள்ளது.

இந்த நிலையில் நிலுவை ஊதியம் மற்றும் பொறுப்புத் தொகையை சேர்த்து ரூ.1679 கோடியை மத்திய  அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.