என் அப்பா ரஜினிகாந்த் பார்த்து சங்கி என்ற விமர்சிப்பது வருத்தமாக உள்ளது என ஐஸ்வர்யா ரஜினி தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே சாய்ராம் பொறியியல் கல்லூரியில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய ஐஸ்வர்யா, எங்க அப்பா ரஜினிகாந்தை சங்கி என சிலர் விமர்சிக்கின்றனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரை தவிர யாரும் தைரியமாக நடித்திருக்க மாட்டார்கள் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.