தமிழகத்தில் கொரோனா தொற்றின் போது பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் 17.15 கோடியை அமைச்சர் சிவசங்கர் ஒதுக்கியுள்ளார். அதனைப் போலவே 14வது ஊறிய ஒப்பந்தத்தின் படி ஊதிய நிலுவைத் தொகை 171 கோடியை வழங்கவும் ஆணையிட்டு உள்ளார்.

கொரோனா காலத்தில் தன் உயிரையும் கருதாமல் பணியாற்றியதற்காக போக்குவரத்து ஊழியர்களுக்கு இந்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.