தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஐந்து சதவீதம் அல்லது மொத்த கடைகள் 20க்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கடை ஒதுக்கப்படும்.

இது தொடர்பாக உரிய கிராம, வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் உரிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த புதிய நடைமுறை ஊராக உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும், எதிர்வரும் குத்தகை காலத்தின் போது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.