மதுரையில் ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த Rapido bike taxi என்ற தனியார் நிறுவனமானது முறையான அனுமதி பெறாமல் மதுரையில் 2000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இவ்வாறு ரேபிடோ நிறுவனம் உரிய அனுமதி பெறாமல் டூவீலர் ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், ரேபிடோ மூலம் வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்தக் கூடாது என்றும், பைக் டாக்ஸிகளை பறிமுதல் செய்ய தனிப்படை அமைத்தும் ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். இது படிப்படியாக தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.