தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்கள்  எடை குறைவாக இருப்பதாக ரேசன்  கடை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இந்நிலையில் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் உரிய எடையுள்ள பொருட்களை அனுப்பிவைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் OPS வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்குகளிலிருந்து கடைகளுக்கு அனுப்பும் அரிசி, சர்க்கரை மூட்டைகளில் 4,5 கிலோ எடை குறைவதாக புகார்கள் வருகின்றன . அதிமுக ஆட்சியில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை. அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.