உத்திரபிரதேச மாநிலத்தில் உண்ணாவ் என்ற மாவட்டத்தில் உள்ள கேவானாவை சேர்ந்த 59 வயதான ஜதா சங்கர் என்பவர் உயிருடன் இருக்கும் போதே தனது சவப்பெட்டியை செய்தார். அவர் இறந்த பிறகு அவரது சந்ததியினர் அதை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகத்தில் அவரே வியாழக்கிழமை இரவு இறுதி சடங்கு விழாவை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 300 கிராம மக்களுக்கு இரவு உணவும் ஏற்பாடு செய்தார். இந்த முதியவர் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு தனது கல்லறையை கட்டினார். ஆனால் உறவினர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த முதியவரின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது