சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகள் தொடர்பான வினோத வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு நபர் விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பிடம் சக மனிதரிடம் பேசுவது போல உரையாடும் வீடியோ தற்பொழுது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், கடுங்குளிரில் இருந்து தப்பிக்க ஒரு நபர் நெருப்பு மூட்டி அமர்ந்துள்ளார். அவருக்கு மிக அருகிலேயே ஒரு பெரிய நாகப்பாம்பு படம் எடுத்தபடி அமர்ந்துள்ளது. பொதுவாக பாம்பைக் கண்டாலே அலறி ஓடும் சூழலில், அந்த நபர் மிகவும் நிதானமாக அந்தப் பாம்புடன் பேசுகிறார்.

 

பாம்பைப் பார்த்து அவர் கேட்கும் கேள்விகள் தான் பார்ப்பவர்களை வியப்படையச் செய்துள்ளன. அந்தப் பாம்பை நோக்கி, “உனக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?” என்று நலம் விசாரிக்கிறார். மேலும், “பதற்றப்படாமல் நிதானமாக இரு, இந்த நெருப்பின் வெப்பத்தை அனுபவி” என்று கனிவுடன் கூறுகிறார்.

அந்த நபர் பேசப் பேச, அந்தப் பாம்பும் தனது தலையை (படம்) ஆட்டி அவருக்குப் பதில் சொல்வது போல அசைவுகளை வெளிப்படுத்துகிறது. மனிதனின் பேச்சைப் புரிந்து கொண்டு அந்தப் பாம்பு நடந்து கொள்வது போலத் தெரிவதால், இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இந்த வினோதமான மற்றும் நெகிழ்ச்சியான காட்சியைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், “இயற்கையும் மனிதனும் இவ்வளவு நெருக்கமானவர்களா?” என ஆச்சரியத்துடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.