அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒருவரது தலைக்கு விலை வைப்பவர் போலி சாமியார் ஆகத்தான் இருக்க வேண்டும். அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளார்.