பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து அவரது மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார். தனது x பதிவில், ஐயா எந்த முடிவு எடுத்தாலும் அது கழகத்தின் நலன், தொண்டர்களின் நலன், தமிழக மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் இருக்கும்.

நாம் வென்று காட்டுவோம்… வரலாறு படைப்போம்… மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் உண்மைத் தொண்டர்களே.. தயாராகுங்கள் என பதிவிட்டுள்ளார்.